
மனமாற வாழ்த்தும்
இனிய 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ஆங்கிலேயரிடம் அடிமை பட்டோம், அளவில்லா துன்பப்பட்டோம், ஆண்டுகள் பல கழித்தோம், ஆத்திரம் பொங்கியதால் ஆயிரம் வீரர்கள் வந்தனரே! தன்னுயிர் நீத்து வெற்றியைத் தந்தனரே! ஆண்டுகள் பல கடந்தாலும், அவர்கள் தியாகத்தை மறவோமோ!!
துயரின்றி நாம் வாழ துன்பம் பல கண்டவர்களுக்கும் ஒய்யாரமாக நாம் வாழ உயிர் விட்ட சிங்கங்களுக்கும் மானத்தோடு நாம் வாழ செக்கிழுத்த செம்மல்களுக்கும் சுதந்திரமாக நாம் வாழ சண்டையிட்ட மறவர்களுக்கும் சுதந்திர நாளில் இதய அஞ்சலியை செலுத்துவோம்.
தன்னிகரில்லா தலைவர்கள் தம் உயிர் நீத்து, தம் நாட்டு மக்களின் உரிமைகளை அவர்தம் கைகளில் வழங்கிய நாள் இந்த சுதந்திர நாள். இந்நாளில் நாம் அனைவரும் நம் நாட்டை வல்லரசு நாடாக மாற்ற உறுதி ஏற்போம்.
ஜெய்கிந்த்!!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!



