
மனமாற வாழ்த்தும்
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்
கண்ணனும் நீயே கறுப்பனும் நீயே இளையவனும் நீயே இடையனும் நீயே
மண்ணை தின்று வெண்ணை திருடி கண்ணை உருட்டி கவர்ந்தவன் நீயே!
வம்சம் தழைக்க கம்சனை கொன்றவன் நீ பாண்டவர் ஜெயிக்கவும் கௌரவர் வீழவும் காரணம் நீ தர்மம் தழைக்க உழைத்தவன் நீ
இன்றைய நாள் நீ இந்த உலகில் அவதரித்த திருநாள்! எங்கள் வாழ்வில் இனிதான ஓர் நாள்!
இந்த இனிய கிருஷ்ண ஜெயந்தி திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் கண்ணனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!



