
மனமாற வாழ்த்தும்
இனிய பக்ரித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
திரும்பும் திசையெங்கும் இருப்பவனே விரும்பும் விஷயத்தை கொடுப்பவனே உன் இசைவின்றி ஓர் இலையும் அசையாதே உன் ஆசையின்றி ஓர் மனமும் பிசையாதே... உன்னை நாடி உண்மை தேடி வருவோர் கோடி...
நானும் வரவே நாளும் அழுது கேட்டேன் பாடி... இம்மையில் கண்டு விட்டால் உன் இல்லம்... மறுமையில் குளிர்ந்திடுமே... என் உள்ளம்...
ஆதியும் நீ... அந்தமும் நீ... எங்களுக்கு எல்லா சொந்தமும் நீ... உன்அன்புக்கு எல்லையில்லை... உன் அருளிருந்தால் தொல்லையில்லை... எங்கள் கண்ணீரை பன்னீராக மாற்றுபவனே...
எங்களை மனிதரில் புனிதராக மாற்று... எங்கள் அழுக்கு எண்ணங்களை... ஆடம்பரத்தை... அகம்பாவத்தை... நாம் இந்த தியாகத் திருநாளில் அறுத்து எறிய எங்களுக்கு வழிகாட்டு...
இந்த இனிய பக்ரித் திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
வீட்டில் இருப்போம்!கொரோனாவை வெல்வோம்!!



