
மனமாற வாழ்த்தும்
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கெல்லாம் முதல்வனே! சிவனின் புதல்வனே! யானை முகம் கொண்ட ஆதவனே!
தம்பிக்கு துணை நின்ற தூயவனே! இசையின் நாதமே! உன் தும்பிக்கையே எங்கள் வாழ்வின் நம்பிக்கை!
இந்த இனிய விநாயகர் சதுர்த்தி திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் விநாயகரிடம் வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!



